Wednesday, July 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

572-

அழுவதைத் தவிர
வழி இல்லை
அழுதாயிற்று
இனி அழுகைக்கு
வழி இல்லை

573-

வெள்ளைத் தாளை படிப்பதற்கு
எழுத்துக்கள்
தேவையில்லை

574-

வானத்தில் விழிகள்
சதுரங்களில்
தூங்கி விடுகிறேன்

575-

பறிக்க நீளும் கரம்
பூவின் புன்னகைப் பார்த்து
தடவிவிட்டுத் திரும்புகிறது

576-

அன்பு மட்டுமே இருக்கிறது
உன்னிடம்

இதை வைத்துக்கொண்டு
என்ன செய்யப் போகிறாய்

அன்பு செய்யப் போகிறேன்

1 comment: