Wednesday, April 13, 2011

வலிகள்

இரவு தன் வலியை
கனவிடம் சொன்னது

கனவு தன் வலியை
கண்ணீரிடம் சொன்னது

கண்ணீர் தன் வலியை
பூமியிடம் சொன்னது

பூமி தன் வலியை
வேரிடம் சொன்னது

வேர் தன் வலியை
பூவிடம் சொன்னது

பூ தன் வலியைச் சொல்லாமல்
உதிர்ந்து போனது

2 comments:

  1. அருமை
    பூ தன் வலியைச் சொல்லாது
    மலர்ந்து சிரித்தது
    அதனால் தொடர்ந்து
    வந்த வலி
    மண்ணோடு
    மறைந்து தொலைந்தது என
    பாசிட்வாக கவிதை முடியும்
    என நினைத்தேன்
    நல்ல படைப்பு
    தொடர எனது இனிய
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வலிகளின் பட்டியல்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete