Sunday, June 29, 2008

அன்பின் கையெழுத்து

ஒரு மழை நாளில்
ஓர் குடைகீழ்
நாம் நிற்க
என் கையெழுத்திட்டு
நான் உனக்கு
வழங்கிய புத்தகம்
இதோ இத்தனை
வருடங்கள் கழித்து
ஒரு பழைய
புத்தகக் கடையில்

வாங்கிச் செல்கிறேன்

புத்தகத்தில் அழிந்திருக்கிறது
என் பெயரும்
நம் அன்பும்

(1.10.08 ஆனந்த விகடன்
இதழில் பிரசுரமானது)

5 comments:

  1. சில தவிர்க்க இயலாத காரணங்களினால் இம்மாதிரி சம்பவங்கள் நடை பெறுகின்றன.

    உண்மைக் காரணங்கள் உரிய இருவருக்கு மட்டுமே தெரியும்.

    ReplyDelete
  2. arumaiyaana kavi varikal

    anpudan
    rahini
    germany

    ReplyDelete
  3. ராஜா,

    நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  4. Padikkum ellar manadhilum ninaivuthooralgalai sindha vaikkum gananmana kavithai
    Vazhthukkal Raajaa

    ReplyDelete
  5. அன்பாய் கையெழுத்திட்டு விடுதியில் அக்கா ஒருவர் தந்த புத்தகம் தொலைந்த தருணம் மனக்கண்ணில் வந்து போனது ..

    ReplyDelete