Wednesday, June 18, 2008

கூண்டிலிருந்து...

தொழில் மாற்ற
உத்தேசித்து
கூண்டைத் திறந்து
போகச் சொல்கிறான்
ஜோஸ்யக்காரன்

அவன் காலை
சுற்றி சுற்றி வருகிறது
சுதந்திரம் மறந்த கிளி

2 comments:

  1. அருமை. வெட்டப்பட்ட சிறகுகளும் கூடுதல் காரணமாயிருக்கலாம்.

    அனுஜன்யா

    ReplyDelete
  2. ...அதோடு கூடுதலாக பழக்கப்படுத்தப்பட்ட அடிமைத்தனமும்.இதை ஒரு subtext ஆகவும் வைத்து இந்த கவிதையைப் பார்க்கலாம்.

    ReplyDelete