Sunday, December 09, 2007

கதையின் பயணங்கள்

ரயில் பயணத்தை அழகாக்கியவர்
கதை சொல்லிக்கொண்டே வந்தார்

ஒப்பனைக் கலப்பில்லாத
அவர் சொற்களிலிருந்து
வெளியான உயிர்
எங்களோடு பயணம்
செய்வது போலிருந்தது

மலைக்குகை தாண்டியது ரயில்
சத்தமிட்டபடி

கதையை சீக்கிரம்
முடித்து விடுவீர்களா என்றேன்

நான் இறங்குவதற்கு முன்பா
நீங்கள் இற்ங்குவதற்கு முன்பா
யோசனைகளை கண்ணில்
குவித்தபடி கேட்டார்

அவரும் நானும்
இறங்கிய பின்னும்
கதை தொடர்ந்து கொண்டிருந்தது
பயணத்தை
வேறு வேறு பயணிகளோடு

2 comments:

  1. m....

    ippadiththaan mudiyumnu ninaikkala..!

    ReplyDelete
  2. ஒவ்வொரு பயணத்திலும் கிடைக்கின்றன பல கதைகள்.

    ReplyDelete