Thursday, August 30, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்


957-

கால்கள் சக்கரம்
உடல் வாகனம்

958-

விரிந்து கிடக்கும் 
வெள்ளைத்தாளில் 
எங்கே எழுத்து 
தேடுகிறேன்

959-

பசியும் தேட 
நானும் தேட 
பசிக்குக் கிடைத்தது 
எனக்குக் கிடைக்கலாம்         

960-

இந்த வலியின் மேல் 
வேறொரு வலியைப் 
பூசுகிறேன்
ஆறிவிடும் 
என்ற நம்பிக்கையில்

961-

நான் ஒற்றைச் செங்கல்
ஆனாலும் 
சுவரின் கனவுகள் 
எனக்குண்டு

962-

மரக்குதிரை 
போன தூரம் 
அதன் மனதுக்குள் 
ரொம்ப நீளம்

963-

வலை அறுத்துக் 
கடல் திரும்பும் மீன் 
என்ற வரியுடன் 
நீந்தும் மீன் 
தூரமாகிறது 
கொலை வலைத் தாண்டி

964-

என் வரைபடத்தை 
பொய்யால் எழுத 
பூரணமாச்சு
மெய்யால் எழுத 
பிய்ந்து போச்சு






2 comments:

  1. மரக்குதிரை, ஒற்றை செங்கல் - மிக அழகான கவிதைகள். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. நான் ஒற்றைச் செங்கல்
    ஆனாலும்
    சுவரின் கனவுகள்
    எனக்குண்டு

    அழகான வரி. ஒவ்வொரு கனவையும் இதனுள் ஆய்வு செய்திட இயலும். (abstract-யாக)

    ReplyDelete