ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Thursday, July 31, 2014
இதுபோல்
நாங்க
பசிக்குப் பசியத்தான்
தொட்டுக்குவோம்
இதுபோல்
வெறும் தட்டில்
வேறு வரிகளும்
இருந்தன
Wednesday, July 30, 2014
சொற்கள்
இருவருமே
இருளில் இருந்தோம்
சொற்கள்
முகம் பார்க்கப்
பேசிக்கொண்டிருந்தோம்
ஏன்
ஏன் தற்கொலை
செய்து கொள்ளக்கூடாது
என்ற கேள்வியில்
தொங்கி
மீள்கிறேன்
பல நேரம்
Tuesday, July 29, 2014
போல
ரகசியத்தின்
அந்தப் பக்கமும்
இந்தப் பக்கமும்
இருக்கிறோம்
ரகசியங்களைப் போல
ஒன்றுமில்லை
திரை விழுந்து
நேரமாகிறது
அரங்கில்
இதற்கு மேல்
ஒன்றுமில்லை
நீங்கள் பார்க்க
Saturday, July 26, 2014
அந்த பெண்
மழையை ரசித்தபடி
வயலின் வாசிக்கும் பெண்ணை
வரைந்து முடித்தேன்
இப்போது நான் ரசிக்க
மழை இசை
மற்றும் அந்த பெண்
முதலில்
கத்தி பாய்ந்த மனிதரை
பிறகு காப்பாற்றலாம்
குருதி படிந்த கத்தியை
முதலில் கழுவுவோம்
Friday, July 25, 2014
பசியின் கண்களில்
என் கண்களில்
பசி
பசியின் கண்களில்
நான்
நடக்கிறேன்
என்னோடு
பயணித்தப் பறவை
மறைந்து போய் விட்டது
மறுபடி வருமென்று
வானம் பார்த்தபடி
நடக்கிறேன்
ஒரு கணம்
குழந்தை
பறித்துத் தந்தது
பூ
வாங்கிக் கொண்ட
ஒரு கணம்
கடவுளாக இருந்தேன்
மழையின் பாடல்
மழைக்கு ஒதுங்கி இருந்த
சிறுவன் கையில்
புல்லாங்குழல் இருந்தது
அதன் மேல்
துளிகள் மின்னிக்கொண்டிருந்தன
அதிசயித்தபடி
பார்த்துக்கொண்டிருந்தான்
எனக்காக வாசிப்பாயா
எனக் கேட்டேன்
முகம் திருப்பாமல் சொன்னான்
மழையின் பாடலைக்
கேட்டுக்கொண்டிருக்கிறேன்
மன்னிக்கவும்
Tuesday, July 22, 2014
உற்றுப் பார்க்கிறது இரவு
நேரம் கடக்க
பெருமூச்சு விட்டு
அங்கும் இங்கும்
பார்த்து
பசியை எச்சிலில்
துப்பியபடி
யாராவது கிடைப்பார்களா என
இரவிடம் கேட்கிறாள்
கால் ஊனமானப் பெண்
சொல்ல வார்த்தைகள்
எதுவும் இன்றி
அவளையே
உற்றுப் பார்க்கிறது
இரவு
Saturday, July 12, 2014
நமக்கு நனையத் தெரியவில்லை
1-
வெறும் கைகளுடன்
திரும்புகிறார் அப்பா
அந்தக் கைகளுக்கு
முத்தம் தருகிறாள் குழந்தை
2-
மழைக்குள் இருக்கும்
குழந்தைகளுக்கு
நனைவது தெரியவில்லை
மழைக்கு வெளியே
இருக்கும் நமக்கு
நனையத் தெரியவில்லை
Thursday, July 10, 2014
பசி
பகிர்ந்து சாப்பிட
நம்மிடம் பசிதான்
இருக்கிறது என்று
எழுதிய வரியில்
அடங்கியது கொஞ்சம்
என் பசி
Sunday, July 06, 2014
படகு
குடை வரைந்த தாளில்
படகு செய்து
மழை நீரில்
விடுகிறாள் மான்யா
போகிறது படகு
குடை பிடித்து
Friday, June 27, 2014
பிரார்த்தனை
என் பிரார்த்தனையில்
உப்புக் கரித்தது
என்றார் கடவுள்
கண்ணீர் கலந்திருந்தது
என்றேன் நான்
Thursday, June 26, 2014
ஒரு வரி போதும்
இறந்து போக
எத்தனையோ தருணங்கள்
இருக்கின்றன
உயிர்த்தெழ
ஒரு வரி போதும்
பயம் மேயும் ஆடு
பயம் மேயும் ஆடு
என்ற வரியை
அடுத்த வரியில்
வந்த சிங்கம்
அடித்துக் கொன்றது
Saturday, June 14, 2014
தெரியவில்லை
குட்டிப்பூனைப் போல
கண்கள் மெல்ல
வெளியே வந்து
உடல் மேல் குதித்து
விளையாடுகிறது
எப்படிப் பார்க்கிறேன்
தெரியவில்லை
Friday, June 13, 2014
நான் கடவுளுடன் விளையாடுகிறேன்
நான் கடவுளுடன்
விளையாடுகிறேன்
கடவுள் பட்டாம்பூச்சியுடன்
விளையாடுகிறார்
பட்டாம்பூச்சி என்னுடன்
விளையாடுகிறது
சொல்கிறாள் மான்யா
அவள் சொற்களில் மயங்கி
கடவுளைப் பார்க்காமல்
விட்டு விட்டேன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)