Friday, July 25, 2014

மழையின் பாடல்

மழைக்கு ஒதுங்கி இருந்த 
சிறுவன் கையில் 
புல்லாங்குழல் இருந்தது 
அதன் மேல் 
துளிகள் மின்னிக்கொண்டிருந்தன 
அதிசயித்தபடி 
பார்த்துக்கொண்டிருந்தான்
எனக்காக வாசிப்பாயா 
எனக் கேட்டேன்
முகம் திருப்பாமல் சொன்னான்
மழையின் பாடலைக் 
கேட்டுக்கொண்டிருக்கிறேன் 
மன்னிக்கவும்

No comments:

Post a Comment