Monday, September 29, 2025

உறைந்துபோனவர்கள்

 

உறைந்துபோன

மனநிலையில்

இருந்தோம்

 

பேச வரவில்லை

அல்லது

வார்த்தைகள்

வரவில்லை

 

கிளைகளில் அசைவைப்

பார்த்தோம்

உதிர்ந்த இலைகளில் மேல்

பார்வைபட்டுத் திரும்பியது

காற்று தொட்டுப்போனது

 

கண்களை

மூடிக்கொண்டு

நினைவுகளில்

சொற்களைத் தேடினோம்

 

கிடைக்கவில்லை

 

நிசப்தத்தின் நீளம்

அதிகமாகி இருந்தது

 

ஒருகணம்

கண்களால் புன்னகைத்துவிட்டு

அவரவர்

திசையில்

பயணப்பட்டோம்

உறைந்த நிலையோடு

 


 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment