Friday, March 22, 2024

உணர்வின் தருணம்

 வண்ணக் கொப்பரையில்

தூரிகை விழுந்து

தற்கொலை

செய்துகொள்வதுபோல்

கனவு வந்தபோது

அவன் அலறி துடித்து

எழுந்தான்

அந்த உணர்வின்

தருணம்தான்

அவனை

ஓவியனாக்கியது

No comments:

Post a Comment