Monday, March 18, 2024

பறவையின் பாடல்

பறவைபோன தடத்தில்

மிதந்துகொண்டிருந்தன வார்த்தைகள்

 

எதுவும் பிரிந்துபோகாமல்

காற்று மெல்ல ஊதி ஒன்றாக்கி

என்னிடம்

கொண்டுவந்து சேர்த்தது

 

கவனித்து வரிசையாக்கி

இசைலயத்தோடு எழுதினேன்

 

பிறகு பாடியபோது

அதே பறவை

ஒரு கிளை மீதமர்ந்து

கேட்டுக்கொண்டிருந்தது


No comments:

Post a Comment