Tuesday, January 16, 2024

கதையும் குழந்தையும்

 கடவுளின் தோள்மேல்

அமர்ந்திருக்கிறேன்

எனச்சொன்னது

மலைமேல்

அமர்ந்திருந்த குழந்தை

எப்போது

கீழே வருவாய்

குரல் எதிரொலிக்கக் கேட்டேன்

கடவுள் எனக்குக்

கதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்

கேட்டு முடித்தவுடன்

வருவேன் என்றது

வந்தபின்

அந்த கதையை எனக்குச் சொல்வாயா

ஆர்வம் கூட கேட்டேன்

கடவுள் எனக்குச் சொன்னக்

கதையைச் சொல்ல மாட்டேன்

நான் மலைக்குச் சொன்னக்

கதையைச் சொல்கிறேன் என்றது

   

 

No comments:

Post a Comment