Tuesday, June 08, 2021

இரவின் உரையாடல்

புணர்ந்துகொண்டிருக்கும் போதே

உன்னைக் கொன்று

நான் தற்கொலை

செய்துகொள்ள வேண்டும்

 

அவள் பதட்டப்பட்டு

விலகிவிட்டாள்

 

அடியேய்

சும்மா சொல்லிப்பார்த்தேன்

பயந்துவிட்டாய்

புன்னகைத்தபடிச் சொன்னான்

 

அவளும் சொல்லிப்பார்த்தாள்

 

புணர்ந்துகொண்டிருக்கும் போதே

உன்னைக் கொன்று

நான் தற்கொலை

செய்துகொள்ள வேண்டும்

 

பார் என்

தற்கொலையை

கொலையாக்கிவிட்டாய்

சிரித்தபடிச் சொன்னான்

 

 

 

 


No comments:

Post a Comment