Wednesday, April 29, 2020

பசி


அங்கிருந்த எல்லோருக்கும் பசித்தது
அதில் பழைய பசியும் புதிய பசியும்
சேர்ந்து கொண்டது
இட்டு நிரப்ப வேண்டிய பள்ளம் போல்
இருந்தது வயிறு
ஆளாளுக்கு ஒரு கதைச் சொல்லி
பசியை மறக்கப்பார்த்தனர்
குழந்தைப் பறவைகளுக்கு
தானியம் போட்டு
நட்பாக்கிக்கொண்ட கதையைச் சொன்னது
ஒரு தம்பி பிறை நிலவுக்கு
கதைச் சொன்னபோது
அது பௌர்ணமியாகி விட்டதைச் சொன்னான்
அப்பா வனத்திற்குப் போய்
பழங்களைப் பறித்து வந்த கதையைச் சொன்னார்
அம்மாவிற்குக் கதை ஏதும் தோன்றவில்லை
எல்லோரையும் மிரள மிரள பார்த்தாள்
சோறுதான் எனக்குக் கதை
யாராவது அத நிறையப் போடுங்க
கூட்டத்திலிருந்து கேட்டது ஒரு குரல்

No comments:

Post a Comment