Tuesday, December 16, 2014

எப்போதும் போல்

துயரம் போல் 
பெய்கிறது மழை
என்றவரும் 
சந்தோஷம் போல் 
பெய்கிறது மழை 
என்றவரும் 
எதிரெதிர் மாடியிலிருந்து 
பார்த்துக் கொண்டிருந்தார்கள் 
எப்போதும் போல்
பெய்து கொண்டிருந்தது மழை

No comments:

Post a Comment