Sunday, August 18, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1009-

ஒளிந்து கொண்ட
கனவுக்குள்
வனம் இருந்தது
என்னை ஒரு
சிங்கமாக்கி
வெளி அனுப்பியது

1010
நினைவில் 
தவமிருக்கும் 
கண்ணீர்த்துளி

1011-
கனவில்
தொலையுங்கள்
கனவைத்
தொலைக்காதீர்கள்

1012-
உன் மௌனத்தில்
நீந்தும் மீன்தான்
என்னைப் பார்த்து 
சொற்களைத் துப்புகிறது 

1013-

வந்து சேர்ந்த வரியில்
யாரோ இருந்து
போன தடம்

1014-

மன்னிக்கப்
பழகிக் கொண்டீர்கள்
குற்றவாளிகள் 
அதிகமாகி விட்டார்கள்

1015-

அழித்த வரி கேட்டது
என் ஆயுள்
அவ்வளவுதானா என்று












No comments:

Post a Comment