Friday, May 18, 2012

காகிதப் புலி

நான் எழுத்தில்
சிக்கிக்கொண்ட 
காகிதப் புலி 

என்னைக் கொண்டுபோய் 
வனத்தில் விடுவாயா

செய்வதறியாது 
திகைத்து 
ஒரு நாள் வனம் 
போய் நின்று 
தூக்கி எறிந்தேன் 
புத்தகத்தை 

எழுத்திலிருந்து 
தானே விடுதலைப் பெற்று 
புலிப்போகக்கூடும் 
கானகத்திற்கு 

திரும்ப எனக்கு 
புத்தகம் கிடைக்கக்கூடும் 
படிப்பதற்கு

No comments:

Post a Comment