Sunday, February 15, 2009

இடுப்பிலிருக்கும் குழந்தை

முண்டியத்து
முன்னேறி
இடம் பிடித்து
அமர்ந்து
வெற்றி பெருமூச்சு விட்டு
பின் பார்க்க
ஏற முடியாமல்
திணறி
வெளியேறி
வெயில் கவ்வ
தள்ளி நிற்கும் தாயின்
இடுப்பிலிருக்கும் குழந்தை
சிரித்தபடியே
கையசைத்துக் கொண்டிருந்தது
என்னைப் பார்த்து

2 comments:

  1. இதற்க்காகவே தினம் இடம் பிடிக்கலாம் ...

    ReplyDelete
  2. உங்களின் இந்த கவிதை பல நிலைமைகளில் உவமையாகப் புரிந்து கொள்ளப்படலாம்.

    கூர்ந்து நோக்கின் ஆழமான கருத்து.

    ReplyDelete