Monday, December 16, 2019

பறவை


சுவரில்
வரைந்த பறவை
எதிரே இருந்த
மரத்தில் போய்
அமர்ந்துகொண்டது
பிறகு வானத்திற்குப்
பறந்துவிட்டது
இப்போது
வரைந்துகொண்டிருக்கிறேன்
பறவையோடு
பறந்துகொண்டிருக்கும்
வானத்தை
-    ராஜா சந்திரசேகர்


No comments:

Post a Comment