Tuesday, March 26, 2019

பாறை விழுங்கிய உளி


பாறை விழுங்கிய உளி
சிலையின்
தொண்டைக்குள் போய்
சிக்கிக்கொண்டது
2-
மழையில் சந்தித்தோம்
சொற்கள் நனைய
பேசிக்கொண்டிருந்தோம்
3-
நினைவு
துயரத்தை
அள்ளி எடுத்து
மனதுக்கு
ஊட்டப்பார்க்கிறது
4-
காமம்
கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறது
காதல்
திறக்கலாமா வேண்டாமா என யோசிக்கிறது
5-
என் சொற்களை
உன் மெளனம்
தாய்மையுடன்
தடவும்போது
சுரக்கின்றன
அன்பின் பாடல்கள்

No comments:

Post a Comment