Friday, November 09, 2018

பிளாட்பாரப் பாட்டி


நெடுநாள் பார்க்கும்
பிளாட்பாரப் பாட்டியிடம்
ஒரு நாள் கேட்டேன்
ஏதாவது ஒரு ரயிலில் ஏறி
ஏதாவது ஒரு இடத்திற்குப் போய்
இறங்கி இருக்கலாமே
கண்கள் துடைத்து
சிரித்தபடிச் சொன்னாள்
அப்படித்தான் தம்பி
இங்க வந்து சேர்ந்தேன்

No comments:

Post a Comment