Saturday, May 14, 2016

எங்களுக்குத் தேவை

யாரோ ஒரு பெரியவர்
என் கைப் பிடித்து
அழைத்துப் போகச் சொல்கிறார்
நடுக்கத்துடன்

வழித் தெரியாமல்
தடுமாறி நிற்கும் நான்
அவரிடம்
இதை எப்படிச் சொல்வது

செய்வதறியாது
அவர் கையைப்
பற்றிக் கொள்கிறேன்

இப்போது
எங்களுக்குத் தேவை

சிறு அன்பு
சின்னப் புன்னகை
கொஞ்சம் உணவு
நிறைய நம்பிக்கை
ஒரு பாதை

1 comment:

  1. கவிதை அருமை ... தங்கள் வலைப்பூ கண்டத்தில் மகிழ்ச்சி.. என்னுடைய வலைப்பூ http://ethilumpudhumai.blogspot.in/ நன்றி

    ReplyDelete