Friday, March 21, 2014

வரும் வழியில்

வரும் வழியில்
யானையையும் பாகனையும் 
பார்த்தேன்
பாகனை என் பக்கத்தில் வந்து 
நிற்கச் சொன்னேன்
யானையைச் சுற்றி 
ஒரு காடு வரைந்தேன்
யானை தும்பிக்கை நீட்டி 
என்னைத் தொட்டு விட்டு 
காட்டில் ஓடி மறைந்தது
பாகனை ஒரு கடையில் 
வேலைக்கு சேர்த்து விட்டேன்
அங்கு அவன்சந்தோஷமாய் 
யானை பொம்மைகள் 
விற்றுக் கொண்டிருக்கிறான்

1 comment:

  1. இருவருக்குமே திருப்தியான வாழ்க்கை...

    ReplyDelete