Thursday, October 24, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1047-

கசங்கிய சொல் ஒன்றை 
மெல்லப் பிரிக்கிறேன் 
வெளி வரும் காற்றில் 
பாடல் கேட்கிறேன்

1048-

புல்லென அசையும் 
அமைதியின் அடியில் 
நான் உதிர்ந்து கிடக்கும் 
பனித்துளி

1049-

கால்களின் புழுதியில் 
பாதை முகம் 
பார்க்கிறது 

1050-

மீட்டெடுக்க 
தொலைந்தாக வேண்டும்

1051-

கனவில் மிதந்த சொற்கள் 
அந்திக் கருக்கலில் 
பறவைகளாயின

1052-

எப்படித்தான் 
கலைத்துப் போட்டாலும் 
இதுதான் நான்

1053-

இந்த ரொட்டி 
பசியை 
அழகாக்குகிறது

1054-

ஊதிய பனித்துளி 
நதியாகி 
என்னை மூடியது 

1055-

வழி அனுப்பி 
வைத்த கண்ணீர் 
வழி சொல்லிப் போனது





1 comment:

  1. அனைத்தும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete