Saturday, July 20, 2013

குறிப்புகள்

ஒரு குறையுமின்றி
எல்லாம் தந்து
பறக்க வேண்டாம்
எனச் சொல்லி
ஒரு பறவையை
அடைத்து வைத்திருந்தேன்

என்னை புதைக்காதே
வானத்தை நோக்கி
வீசி விடு என்ற
குறிப்புகளுடன்
இறந்து போயிருந்தது 

1 comment: