Friday, July 13, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

930-

இருந்தும்
இல்லாது போலிருக்கிறார்கள்
இருப்பவர்கள்

931-

விருந்து இலை 
கடைசிப் பருக்கையில் 
குவியும் கண்

932-

இளைப்பாறிய நிழலிடம் 
பிரியத்தை எப்படி 
சொல்லிச் செல்ல

933-

அவன் கிளையில் 
தொங்கிய போது 
மரத்தின் சில பழங்கள் 
கீழே விழுந்து கிடந்தன

No comments:

Post a Comment