Tuesday, September 07, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

173-

அறையிலிருந்த
ஒவ்வொருவரும்
தங்களுக்குள் ரகசியமாக
சொல்லிக் கொண்டார்கள்
என்னைத் தவிர
எல்லோரும்
இறந்து போவார்கள்

174-

உடலில் வசிக்கிறது
உயிர்
உயிரில் வசிக்கிறது
மரணம்

175-

கை அள்ளிய
இருளை இறுக்க
மூச்சற்றுப் போகும் பயம்

176-
உங்களது பாத்திரம்
நிரம்பி வழிவது குறித்து
உங்களுக்கு ஆனந்தம்

எனது பாத்திரம்
நிரம்பாமல் வழிவது குறித்து
எனக்குப் பேரானந்தம்

3 comments:

  1. 176 ரொம்ப பிடிச்சிருக்கு..

    ReplyDelete
  2. //எனது பாத்திரம்
    நிரம்பாமல் வழிவது குறித்து
    எனக்குப் பேரானந்தம் //

    :)

    ReplyDelete
  3. //எனது பாத்திரம்
    நிரம்பாமல் வழிவது குறித்து
    எனக்குப் பேரானந்தம் //

    அருமை!

    ReplyDelete