Friday, February 15, 2008

கோடுகளின் இசை

வெள்ளைத் தாளைப்
பருகுவதுபோல் பூனை

பிரியம் கூடி
பூனையிடம் கேட்டேன்
உன்னை வரைந்தவரைப்
பார்க்க வேண்டும்

சின்ன சத்தங்கள் செய்தபடி
அழைத்துப்போய்
வரைந்தவரைக் காட்டியது

சூரியன் இறங்கிய
ஒளிவெளியில்
அமர்ந்திருந்தார்

கண்கள் புன்னகைக்க
வரைவதைப் பார்க்கச் சொன்னார்

பியானோவும் ஏழைச்சிறுவனும்

பார்த்தபடியே
மெல்ல இமைமூட
கேட்டது
கோடுகளின் இசை

கண்டெடுத்த
குழந்தை மனநிலையில்
கண் திறக்க
பூனை இல்லை
பியானோ காணோம்
வாசித்த சிறுவனும் இல்லை
வரைந்தவரும்

கேட்டபடி இருந்தது
நின்று போகாத
பூனையின் சத்தம்

(ஓவியர் ஆதிமூலம் நினைவிற்கு)

7 comments:

  1. நல்ல ஒரு ஓவியனுக்கு
    நல்ல ஒரு கவிதாஞ்சலி

    ReplyDelete
  2. நல்ல ஒரு ஓவியனுக்கு
    நல்ல ஒரு கவிதாஞ்சலி

    ReplyDelete
  3. //வெள்ளைத் தாளைப்
    பருகுவதுபோல் பூனை//

    ரொம்பவும் ரசித்துப் படித்தேன்.

    ஓவியத்தைக் கோடுகளின் இசையாகப் பார்ப்பது நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. நல்ல ரசிப்புத்தன்மையுடன் எழுதப்படிருக்கிறது

    ReplyDelete
  5. ராஜா,

    உங்களை "வலைச்சரத்தில்" தொடுத்திருந்தேன் பார்த்தீர்களா?

    http://blogintamil.blogspot.com/2008/02/iii.html

    இது போன்ற அழகான கவிதைகளை வடித்து என்னை செக்க வைத்ததால்தான் :).

    ReplyDelete
  6. /பார்த்தபடியே
    மெல்ல இமைமூட
    கேட்டது
    கோடுகளின் இசை/

    இந்த வரிகள் மட்டுமல்ல; முழுக் கவிதையுமே அருமை. ஆதிமூலத்தின் இழப்பின் வலியை உணரச் செய்கிறது உங்கள் வரிகள்.

    ReplyDelete
  7. ஜ்யோவ்ராம் சுந்தர்
    கூர்ந்து பார்த்துள்ளீர்கள்.நன்றி.

    ReplyDelete