Tuesday, April 14, 2015

உணராமல் போனோம்

பேசத்தான் வந்தோம்
பேசினோம்
பிரிந்துப் போனோம்
மீதி இருக்கும்
இந்தச் சொற்களில்தான்
உண்மையான உரையாடல்
இருந்தது என்பதை
ஒருவரும்
உணராமல் போனோம்

No comments:

Post a Comment