Wednesday, May 27, 2009

ஒரு கவிதையில்

மணல் பற்றி
எனக்குச் சொன்ன நண்டும்
கடல் பற்றிச்
சொன்ன மீனும்
சந்தித்துக் கொண்டன
நான் எழுதிய
ஒரு கவிதையில்

வார்த்தைகளில்
மணல் ஒட்டிக்கிடப்பதைப்
பார்த்ததாகச் சொன்னது நண்டு

கவிதையில்
உப்புக் கரிப்பதாகச்
சொன்னது மீன்

4 comments: