Thursday, November 20, 2008

வனத்தின் புன்னகை

சிறுமி அள்ளிய மணலோடு
சேர்ந்து வந்த விதை
மெல்ல முளைத்து
அவள் கைபடர்ந்து
செடியாகி சிரித்தது
செடியின் பிரியத்தை
சொல்லிவிட்டுப் போனது
ஒரு பறவை
குதித்துப் போன
குழந்தை மனதில்
வனத்தின் புன்னகை

2 comments:

  1. மணல் வனமானதில் குழந்தையோடு குதூகலிக்கிறேன் நானும்....

    ReplyDelete
  2. கவிதை நன்றாக இருக்கிறது. காட்சிகளின் இன்பத்தில் ரசிக்க வைத்தது. கலைவதற்கு முன்பான கனவு போல.

    ReplyDelete