ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Saturday, February 17, 2007
வெற்றுத்தாள்
வரைந்த ஓவியத்தின்
சில பகுதிகளைத்
திருத்த
அழித்தேன்
ஓவியத்தை புதுபிக்க
எடுத்துக்கொண்ட முயற்சியில்
அழித்ததே அதிகமானது
தின்று முடித்தது ரப்பர்
மொத்த கோடுகளையும்
வெற்றுத்தாளில்
பரவி இருந்தது
நிசப்தம்
பாரம் இறங்கிய
பரவசத்தில்
படபடத்தது தாள்
காற்றில்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)