ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, December 04, 2012
பொம்மை சிங்கம்
மேஜை மேல்
பொம்மை சிங்கம்
வனத்தின் வனப்புடன்
அசைவற்று
இருக்கும் என்னை
கூர்ந்து பார்க்கிறது
என் இந்தக்
கல் நிலை
தொடருமானால்
பெருங்கோபம் கொண்டு
பாய்ந்து வந்து
என்னைத் தின்று விடலாம்
ஒரு நாள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment