Wednesday, October 05, 2011

சொல்லாமல்...பேசாமல்

ஒரு கல்லைத்
தூக்கி எறிவது போல

ஒரு கதவை
சாற்றுவது போல

சிலரை
புறக்கணித்து விடுகிறோம்

விழும் கல்
வலி சொல்வதில்லை

சாற்றப்படும் கதவு
பதில் பேசுவதில்லை

அவர்களும் அப்படிதான்
போய்க் கொண்டிருக்கிறார்கள்

வலி சொல்லாமல்
பதில் பேசாமல்

6 comments:

  1. கவிதை பிடித்தது ...வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. வலிகளைப் பேசும் மறுபுறம்.அபாரமான கவிதை.

    கடைசி நான்கு வரி அதிகமெனத் தோன்றியது.

    ReplyDelete
  3. நல்ல கவிதைகள் அருமை.

    ReplyDelete
  4. நல்ல கவிதை, இது போன்ற கவிதைகளை அதிகம் தரவும்.

    ReplyDelete
  5. உங்களின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.நீங்க எழுதிட்டு வர பல கவிதைகள் அருமை.
    வலைச்சரத்தில் இக்கவிதையின் பதிவை இணைத்திருக்கிறேன்.
    நன்றி :)

    கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

    http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_23.html

    ReplyDelete