Monday, October 17, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

705-

உள் நீந்த
மீனானேன்
மீன் நீந்த
நானானேன்

706-

ஒற்றை வரி
அழைக்கும்
மற்ற வரி
மற்ற வரி
இணைக்கும்
மொத்த வரி

707-

தயக்கம்
அடியெடுத்து வைக்கும்
குழந்தையைப் போல

அடிசாய்த்து விடும்
பிசாசைப் போல

708-

என் மேல்
நின்று பார்க்க
தெரிந்தது
என் உயரம்

709-

என்ன என்று
அறியும் முன்
வழிந்தது கனவு
கண்ணீரில்

No comments:

Post a Comment