Thursday, October 21, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

203-

உங்களின் நிறம்
என்ன என்று கேட்டார்
நிறங்களின் நிறம் என்றேன்
போய்விட்டார்

204-

மொழிகள் எதற்கு
கண் துளி
சொல்லும் அன்பு

205-

உள்ளோடும் நதி
நீச்சல் பழகும்
என்னிடம்

206-

மேடையை எதிர்பார்ப்பதில்லை
தனக்குள்
ஒத்திகை செய்பவன்

207-

ஒதுங்கி நின்றால்
ஒதுக்கப்படுவாய்
மையம் கைப்பற்று

6 comments:

  1. அருமையான துளிகள்

    ReplyDelete
  2. நன்றி அருணா,அன்புடன்...

    ReplyDelete
  3. "மேடையை .." - மிக நன்று.. மிகப்பெரிய கருத்தை மிக சுருக்கமாய் சொல்ல உங்களுக்குள்ளே போட்டி இருக்கிறதோ?

    ReplyDelete