Sunday, June 30, 2019

இல்லாது போன கவிதை

மலையுச்சிக்குப் போய்
தற்கொலைக் கவிதை எழுதிவிட்டு
அவன் குதித்துவிட்டான்

ஏறி வந்து
மலை மலரைப்
புகைப்படம் எடுக்கும்
புகைப்படக்காரரின்
கைகளில் போய்
அமர்கிறது
அந்தக் காகிதம்

இதழ் போல்
அதை எடுத்து
எழுதி இருப்பதைப்
படித்துவிட்டு
படபடப்புடன்
தன் உயிரைத் தேடுவது போல்
ஓடி ஓடித் தேடுகிறார்
இல்லாது போன கவிதையை


No comments:

Post a Comment