Friday, June 07, 2019

நான் வாசித்த வரிகள்

கனவிலும்
மரம் வளர்ப்போம்.
கனவுகளை
வளர வைப்போம்.

காது கொடுத்து
மரத்திடம் கேளுங்கள்
பிரபஞ்சத்தின் துடிப்பை.

முதலில்
உன் மனதிலுள்ள
கோடரியைத்
தூக்கி எறி
பின் கையிலுள்ள
கோடரி
தானே விழும்

மரங்கள்
நிமிர்ந்து நிற்கும் வாக்கியங்கள்
இதில் நாம்
இயற்கையைப் படிக்கலாம்

விதை இருந்த
உள்ளங்கையை மூடினேன்
நான் மரமானேன்.

கடவுள் அவன் கனவில் வந்து கேட்டார்
நீ வசிக்க சிறிய இடம் போதுமா
அவன் சொன்னான்
இல்லை பெரிய இடம் வேண்டும்
என்னோடு மரங்களும் வசிக்க.

(நான் வாசித்த வரிகள் -உலக சுற்றுச்சூழல் தினம் – 5.6.2019 -TREE TRUST உயிர் வாழ ஒரு மரம்.
மரம் சூழலியல் நடுவம்&நாற்றங்கால் துவக்க விழா-கோவை)

No comments:

Post a Comment