Tuesday, October 10, 2017

சிறைக்கம்பிகளின் வழியே

சிறைக்கம்பிகளின் வழியே
அப்பா நிலவைப் பார்ப்பார்
நினைவுகள் முடிந்து போக
நிலவு மறைந்து போகும்
நிலா இல்லாத இரவில்
அப்பா எதைப் பார்ப்பார்
கேட்கிறது குழந்தை
அம்மா பதில் சொன்னாள்
உன்னை


1 comment:

  1. அருமை.

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete