Tuesday, May 30, 2017

என்னைப் பார்க்கிறேன்

எனக்குள்ளிருந்து
வெளி வந்து
என்னைப் பார்க்கிறேன்

ஒரு குழந்தையைப் போல‌
பூவைப் போல‌
பெய்யும் மழையைப் போல‌

எனக்குள் திரும்பும் போது
என் நாவில் 
குழந்தையின் பாடல் இருந்தது
கையில்
பூ இருந்தது
நான் நனைந்திருந்தேன்


1 comment: