Saturday, April 23, 2016

ஒரே அறையில்தான் இருந்தார்கள்

உண்மை மங்கலாகத் தெரிகிறது
பொய் தெளிவாகத் தெரிகிறது
என்றவரும்

உண்மை தெளிவாகத் தெரிகிறது
பொய் மங்கலாகத் தெரிகிறது
என்றவரும்

உண்மை உண்மையாகத் தெரிகிறது
பொய் பொய்யாகத் தெரிகிறது
என்றவரும்

ஒரே அறையில்தான்
இருந்தார்கள்






1 comment:

  1. உங்கள் கவிதைகள் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete