Tuesday, January 27, 2015

சாலை ஓவியக்காரன்

நேரங்களும் 
வண்ணமாய் கரைய 
சாலை ஓவியக்காரன் 
வரைந்து முடித்தான் 
அவன் முடித்த கணம் 
மழை பெய்தது 
எல்லோரும் ஓடிப்போய் 
ஒதுங்கி நின்றார்கள் 
ஓவியத்தை 
எடுத்துச் செல்ல முடியாமல் 
நனைந்தபடியே 
அவன் பார்த்துக் கொண்டிருந்தான்

No comments:

Post a Comment