Sunday, March 16, 2014

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1089-
இப்படித்தான் 
புதைந்து போயின 
எத்தனையோ சொற்கள் 
முளைக்குமென்று 
காத்திருக்கிறேன் 
நீரூற்றி

1090-
என்னைத் தேடி 
வந்தேன் 
வருகிறேன் 
வந்துகொண்டிருப்பேன் 

1091-
கண்ணீரில் 
வழிவது 
தப்பித்த கனவா

1092-
ஆசை மறந்தால் 
நிம்மதியாக வாழலாம் 
என்றார் குரு 

நிம்மதிதான் 
என் ஆசை 
என்றான் அவன் 

1093-
குழந்தை எறிந்த பந்து 
முடிவிலி நோக்கிப் போகிறது 
எடுக்க ஓடுகிறாள் 
வளர்ந்து கொண்டே

1094-
தந்திரம் பழக
அன்பு 
வெளியேறும்



1 comment:

  1. அனைத்தும் அருமை...

    1092 : அட...!
    1094 : உண்மை...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete