Sunday, December 29, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1070-

வேடத்தைக் 
கலைத்து விட்டேன்
வண்ணங்கள் 
தங்கி விட்டன

1071-

சொல்லப்படுகிற கதைகளில் 
சொல்லப்படாத கதை 
பயணிக்கவே செய்கிறது

1072-

பெயரைக் குலுக்கினேன்
பெயர்கள் 
உதிர்ந்தன

1073-

மனதின் 
மெளன வெளிகளில் 
மிதந்து போக வேண்டும்

1074-

கூண்டோடு 
பறக்குமா பறவை 
வந்த வரி 
பறந்து போனது 
கூண்டை விட்டு 

1075-

மனதின் அடியில் 
மறைத்து வைத்தேன் 
மனதை வெளியில் 
திறந்து வைத்தேன்

1 comment:

  1. அனைத்தும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete