Tuesday, February 19, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்


982-

எனக்குள்ளிருந்து 
என்னை 
விரட்டுபவனிடமிருந்து 
தப்பிப்பதெப்படி

983-

ஞானக்காட்டில்  
தொலைந்திட வேண்டும் 
மௌனக்கூட்டில் 
அடைந்திட வேண்டும்

984-

மெளனம் தியானிக்கும்.
நான் அமைதியாய் 
பார்த்தபடி

985-

உங்கள் மன்னிப்பின் மீது 
என் குற்றங்கள் 
முளைத்துக் கிடக்கின்றன

986-.

எழுதிய வரியும் 
எழுத நினைத்த வரியும் 
வேறு வேறா 
ஒன்றா

987-

சிறை 
அழகான சிறை 
எனும் போது 
விரிவு கொள்கிறது

988-

குகைக்குள் பயணிக்கும் 
இருள் 
பயமற்று

989-

காட்சி முடிகிறது
கடைசியில் வரும் 
மற்றும் பலரில் 
என் பெயரும் 
இருப்பது புரிகிறது

990-

யாரது
இரவை உலுக்குவது 
என் மீதும் 
கனவுகள் கொட்டுகிறது




No comments:

Post a Comment