Monday, August 27, 2012

மூன்று பேர்

என்னைக் கொல்லும்படி 
மூன்று பேரிடம் 
சொல்லி வைத்தேன் 

துப்பாக்கி சரியில்லை 
முடியாது என்று 
சொல்லிவிட்டார் ஒருவர் 

போலீஸில் அகப்பட்டால் 
என் வாழ்க்கைப் போய்விடும் என்று 
விலகிக் கொண்டார் 
இன்னொருவர்

எனக்கிட்ட 
தற்கொலைக் கட்டளையை 
நிறைவேற்றாமல் உள்ளேன் 
நான் மூன்றாவதாக

சரி போகட்டும் என்று 
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

1 comment: