Wednesday, July 18, 2012

பிரார்த்தனை

கண் மூடிப் பிரார்த்தனை
செய்தாள் குழந்தை 

என்ன வேண்டுகிறாய் 
என்றேன் 

நனைந்து ஆட
மழை வேண்டுமென்று 

உடனே தூறியது

வியந்து பார்க்க
குதித்தபடியேச் சொன்னாள்

என் பிரார்த்தனை
கடவுளுக்குப்
போய்ச் சேரும் முன்
மழைக்கு கேட்டுவிட்டது
உடனே வந்துவிட்டது

4 comments:

  1. நன்றி திண்டுகல் தனபாலன்.

    ReplyDelete
  2. மழை பெய்யாத இந்த தினங்களில் உங்களது கவிதை பெரும் மழையென நனைத்தது மனதை, தொடர்ந்து பெய்யட்டும் உங்களது மழை (கவிதை) துளிகள்.

    ReplyDelete