Sunday, July 01, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

923-

வறண்ட நிலம் 
காத்திருக்க 
கடலில் 
பெய்கிறது மழை


924-


உணர்வுகள் 
எழுதும்போது
பேனா பார்த்துக்
கொண்டிருக்கிறது


925-


குருவே 
நான் மிதக்க 
என்ன செய்ய வேண்டும் 

பறவையாக வேண்டும் 

பறவையாக 
என்ன செய்ய வேண்டும் 

மிதக்க வேண்டும்


926-


ஒரு போதும்
என் பசிக்கு என்னை
இரையாக்கியதில்லை


927-


தயக்கம் 
வழிகளை 
மூடிவிடுகிறது

928-

பிறந்ததே பெருந்தவறு
இதில் பிழை திருத்தி 
என்ன பண்ண

929-

வழிகளைக் கிழித்து விடாதீர்கள்
வழிப்போக்கன் சொன்னான்
பார்க்கத் தொடங்கினேன்
வழிகளைப் புத்தகங்களின்
பக்கங்களைப் போல






1 comment:

  1. வறண்ட நிலம்
    காத்திருக்க
    கடலில்
    பெய்கிறது மழை

    வித்தியாசமான உண்மையான கருத்து.

    ReplyDelete