Wednesday, June 20, 2012

அனுவப சித்தனின் குறிப்புகள்

 906-

பின்னிரவை
நிரப்புகிறேன்
முற்பகல்
நினைவுகளால்

907-

வரிகளில்
இறக்கி வைத்த பின்னும்
கனக்கிறது சுமை

908-

உயிரின்
மேலேறி நின்று
மரணத்தைத்
தள்ளி விட்டேன்

909-

எல்லோருக்குமான கனவு 
பிரபஞ்சத்திடம் 
இருக்கிறது

910-

ஒளித்து வைத்தக் 
கண்ணீரை
ஒருபோதும்
சிந்தியதே இல்லை

911-

கரை ஒதுங்கும் நினைவுகள் 
கால் நனைக்கும்
வழிப்போக்கன்
பயணம் அதைக் கடக்கும்

912-

தூங்கும் இறைவனை
எழுப்பவில்லை
அவர் கனவில் போய்
கோரிக்கை வைத்து விட்டு
வந்து விட்டேன் 

913-

உறங்கப் போகும் 
போதெல்லாம் 
விடிந்து விடிகிறது

914-

என்னிடம் சொல்வதற்கு 
ஒன்றுமில்லை
என் மெளனத்தின் மீது 
கிரீடம் 
வைத்து விடாதீர்கள்.


No comments:

Post a Comment