Monday, March 12, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

876-

மையப்படுத்தும்
மையத்தில்
இருக்க வேண்டும்
என்பதே
மெய்மையின் கோட்பாடு

877-

பயணத்தை
சிறகில் வைத்திருக்கும் பறவை
தூரத்தைக்
கண்களில் வைத்திருக்கும்

878-

இறந்து போனவனை
எழுப்பினேன்
என்னை சாகடித்துவிட்டு
நடந்து போனான்

879-

கிளை வழிகளிலும்
பெரு வழிகளிலும்
பயணித்து
அடைந்தேன்
என் வழியை

880-

துயரத்தைப் பாடிய பறவை
பறந்துவிட்டது
கிளையில் வழிகிறது மழை

No comments:

Post a Comment